Tuesday, May 26, 2009

மலையடிவாரமும்..மனக்குதிரையும்..


அழகு மலையடிவாரத்தில்
குளிர்ந்த பனிப்பொழிவில்
அடர்ந்த பசலைகளின்
இடையில் மோதி வருகின்ற இளங்காற்று...
சட்டென்று மனசை லேசாக்கிப் போக்கிற்று...

ஓடுகின்ற மனசு
சற்றே நிதானிக்க எத்தனிக்கிறது..

காற்றின் சுழற்சி
தொடர்ந்தாற் போலில்லையே..

கிடைக்கின்ற இடைவெளியில்
மீண்டும் பயணிக்க ஆரம்பிக்கின்றது

கட்டடா இவன் மனதை
என்றே கட்டளை இட்டாலும்,
'எப்படிடா?' என்ற எகத்தாளத்துடன்
ஆர்ப்பரிக்கின்றது அலைபாய்கின்ற மனசு..

மனசு போகிற போக்கில்
போய்த்தான் பார்ப்போமே
என்ற எண்ணத்தில்தான்.. எழுத நினைக்கிறேன்..

3 comments:

Javier Tissera said...

saludos

சசி ராஜா said...

Hi Javier,

I saw your profile, seems to be a non-tamilian. I think, saludos means, 'salute' isn't?

Any ways, thanks for your comments!

goma said...

மனக்குதிரைக்கு நாலுக்கும் மேல் கால்கள் இருக்கும் போலிருக்கிறதே!!!
பாய்ச்சலின் வேகம் ,விவேகம்

Post a Comment